சென்னை மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் நிமோனியா காரணமாக நேற்று காலை 6.10 மணி அளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவு செய்தி தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் விஜயகாந்தை பார்ப்பதற்காக கண்கலங்கி ஓடோடி வந்தார். கடந்த 1993இல் வெளியான செந்தூரப் பாண்டியன் திரைப்படத்தில் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்திருந்தார் விஜய்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இன்று அவர் உயிரற்று உடலாய் கிடக்கின்ற நிலையைக் கண்டு நடிகர் விஜய் கதறி கதறி அழுதார். விஜயகாந்தின் உடலை திரும்பத் திரும்ப பார்த்து பார்த்து அழுதார் விஜய். இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விஜயகாந்த் அரசியலிலும், சினிமாவிலும் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மாமனிதராக வாழ்ந்தவர். பல நடிகர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.