ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழக்கக் கோரிய விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவே, படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதை தீர்மானிக்கப் போகிறது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர், புகார் அளித்துள்ளது பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் அது அபாயகரமானதாகி விடும். ஏற்கனவே படத்தை பார்த்து, தணிக்கை குழுவினர் தெரிவித்த மாற்றங்களை செய்த பின், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க, சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.
தனிநீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில், தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில், மத்திய அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ ஆர் எல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. மத்திய தணிக்கை வாரியம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் ஜெனரல் ஏ ஆர் எல் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி எங்களுக்கு உரிய வாய்ப்பு தரவில்லை, தனி நீதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளார், உரிய பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தரவில்லை, ஜனவரி 7 ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டபோது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது என்றும், நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது, 8/12 அன்றே விண்ணப்பித்தனர்-
மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடரவில்லை, மனுவில் கேட்கப்படாத நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என வாதிட்டனர். படம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல்ரோத்தகி ஆஜராகி படத்தை ஒன்பதாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது என்றும் படம் பார்த்து உறுப்பினர்கள் ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகு அதில் உள்ள ஒரு உறுப்பினர் புகார் செய்துள்ளார் என்றும் வாதிட்டார் அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சென்சார் போர்டு பதில்ளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?
நீதிமன்றத்திற்கு ஏன் அழுத்தம் தருகிறார்கள்? பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்காமல் தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் எப்படி வெளியீட்டு தேதியை நிர்ணயிக்க முடியும்? பதில் அளிக்க 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் அளிக்க உரிமை இல்லையா? பல்வேறு நடைமுறைக்ள் இருக்கும் போது சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள்? நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? ஏன் அவசரம்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை 20 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
இன்று பட தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது வழக்கை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படியும், சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று காலை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவே, படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதை தீர்மானிக்கப் போகிறது என்பதால், திரைப்படத்துறை மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் பெறும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மோடி மேடையில் விஜய்? முரண்டு பிடிக்கும் சிபிஐ! அமித்ஷா போட்ட லாக்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!


