Homeசெய்திகள்சினிமாசியான் விக்ரமுக்கு வந்த சோதனை.... 'வீர தீர சூரன்' இன்று திரைக்கு வருமா? வராதா?

சியான் விக்ரமுக்கு வந்த சோதனை…. ‘வீர தீர சூரன்’ இன்று திரைக்கு வருமா? வராதா?

-

- Advertisement -

வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி இருக்கிறது. சியான் விக்ரமுக்கு வந்த சோதனை.... 'வீர தீர சூரன்' இன்று திரைக்கு வருமா? வராதா?இந்த படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். அதாவது இவர் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து, அதன்படி இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார். இந்த படத்திற்கு பிறகு வீர தீர சூரன் பாகம் 1 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சியான் விக்ரமுக்கு வந்த சோதனை.... 'வீர தீர சூரன்' இன்று திரைக்கு வருமா? வராதா? எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 27) உலகம் முழுவதும் திரைக்கு வர இருந்த வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை.

அதாவது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும், B4U என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. B4U நிறுவனம் வீர தீர சூரன் படத்திற்காக முதலீடு செய்திருக்கும் நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அந்த நிறுவனத்திற்கு கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஓடிடி உரிமையை விற்காமல் படத்தை வெளியிடுவதால் B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்கும்படி வழக்கு தொடர்ந்திருந்தது. அதன்படி டெல்லி உயர் நீதிமன்றம் இந்த படத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. சியான் விக்ரமுக்கு வந்த சோதனை.... 'வீர தீர சூரன்' இன்று திரைக்கு வருமா? வராதா?எனவே காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் 10.30 மணி வரை இப்படம் திரையிடப்படவில்லை. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் B4U நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி செலுத்த வேண்டும் எனவும், 48 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த இழப்பீட்டிற்காக இயக்குனர் அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குகிறார்கள் என சொல்லப்படுகிறது. விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்பட்டால் இன்று பிற்பகலில் இருந்து இந்த படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ