spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரள போலீஸ்

நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு – கேரள போலீஸ்

-

- Advertisement -

நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரள போலீஸ்

மலையாள நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது.

நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெிரியவந்துள்ளது.

we-r-hiring

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

முகேஷ் மீதான புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் வன்புணர்வு) பிரிவின் கீழ் மராடு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் ஐபிசி 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: வீட்டை அபகரித்த வழக்கறிஞர் – 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இதே பிரிவுகளின் கீழ் எர்ணாகுளம் டவுன் போலீஸார் மலையாள திரை கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர், நடிகர் எடாவெலா பாபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போன்று காங்கிரஸ் கட்சியின் வி.எஸ்.சந்திரசேகரன் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் மரியன் பில்லா ராஜு மற்றும் நோபல் (தயாரிப்பு பணிகளை கவனிப்பவர்) மீது ஐபிசி 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் கொச்சி காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டு எனவும் தெரிவிக்கின்றனர்.

MUST READ