spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்20 வயது பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபர் கைது

20 வயது பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபர் கைது

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். லால்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஓரு மாதமாக காதலித்து வந்த நிலையில் அந்த பெண் நேற்று வேலை முடிந்து இரவு வீட்டிற்கு செல்லும் போது விக்னேஷ் பின் தொடர்ந்து சென்று அருகிலுள்ள பாலத்திற்கு அருகே அவரை பலவந்தமாக கற்பழித்துள்ளார்.20 வயது பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் விக்னேஷ் வ/18 .இவர் லால்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவரை கடந்த ஒரு மாதமாக காதலித்து வந்தார்.

we-r-hiring

அந்தப் பெண் லால்பேட்டையில் ஒரு தனியார் கடையில் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது விக்னேஷ் பின் தொடர்ந்து சென்று அருகிலுள்ள பாலத்திற்கு அருகே அவரை பலவந்தமாக கற்பழித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரை பெற்றுக் கொண்ட காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ,சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி புகாரின் மீது விசாரணை மேற்கொள்ள பரிந்துரைத்தார்.

இதன்படி காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு வருகை தந்த சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மற்றும் குற்ற செயலில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் விக்னேஷ் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியிடமும் பாலியல் சீண்டல்… ஞானசேகரனின் செல்போனில் 5 ஆபாச வீடியோக்கள்..!

 

MUST READ