Homeசெய்திகள்க்ரைம்மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!

மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!

-

சென்னை அம்பத்தூரில் மது போதையில் பெற்ற தாயை மகன் கழுத்து அறுத்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 8ஆவது தளத்தில் வசித்து வருபவர் ராணி(72). இவர் தனது மகன் சிவாவுடன் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் ஒன்பதாவது தளத்தில் மகள் மகேஸ்வரி குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் தாய் ராணி தனது மகள் மகேஸ்வரி வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு மது போதையில் வந்த இவரது மகன் சிவா தனக்கு உணவு அளிக்காமல் இங்கே மகள் வீட்டில் என்ன செய்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாய் மற்றும் அக்கா இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சிவா, தனது அக்கா வீட்டில் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து தாய் ராணியை கழுத்தில் பலமாக அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் தாய் ராணிக்கு பலத்த வெட்டு ஏற்படவே ரத்தம் சொட்ட சொட்ட இருந்த ராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பால வழக்குப்பதிவு செய்துள்ள அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய போலீசார், குற்றவாளி சிவாவை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ