ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.2000 கடனுக்காக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி செண்பகத்தோப்பு சாலையில் உள்ள ஆட்டுவலசை பகுதியை சேர்ந்தவர் சூர்யா வயது (40)மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி வயது (32) இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். சூர்யா செலவிற்காக பாண்டியிடம் ரூபாய் 2000 பணம் வாங்கியுள்ளார்.ஆனால் பணத்தை திரும்ப தராதாமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதையடுத்து பாண்டி தனது நண்பர் மம்சாபுரத்தை சேர்ந்த சங்கிலி வயது (40), 16 வயது சிறுவன் உள்ளிட்டருடன் இரவு சூர்யாவின் வீட்டிற்கு பணத்தை வாங்க சென்றனர் அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பாண்டி தரப்பில் தாக்கியதில் சூர்யா காயம் அடைந்தார். இதை அடுத்து சூர்யா தனது வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை தனது மனைவி தவசியம்மாள் வயது (36) எடுத்துக் கொடுக்க அடித்த கும்பல் மீது சூர்யா வீசியதாக கூறப்படுகிறது.
ஆனால் குண்டுகள் வெடிக்க வில்லை இதில் அச்சமடைந்த பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.காயம் அடைந்த சூர்யா ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார் அவர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டி,சங்கிலி, 16 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கைது செய்தனர்.இதே போல் வெடிகுண்டு வீசியதாக சங்கிலி கொடுத்த புகாரில் சூர்யா அவரது மனைவி தவசியம்மாள் வெடிகுண்டு சப்ளை செய்த ஜெயக்குமார், முனியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சூர்யாவின் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்கு நான்கு நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்துள்ளது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் விருதுநகர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து டிஎஸ்பி ராஜா உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நாட்டு வெடிகுண்டுகளை மீட்டனர்.மேலும் அந்த பகுதியில் நாட்டு வெடி கூடுதலாக இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தி சட்டவிரோதமாக வெடிகுண்டு வைத்திருந்த குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…. சிங்கப்பெருமாள் கோவிலில் சோகம்!