spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது

கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது

-

- Advertisement -

கோவில்பட்டியில் வங்கியில் செலுத்த வேண்டிய 18 லட்சத்தை மோசடி செய்த வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாற்றிய ஊழியர் கைது.கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கவேல் (44), அவரது உறவினர்களான மகேந்திரன் (36) மற்றும் கிருஷ்ணமூர்த்தி (53) ஆகிய 3 பேரும் கோவில்பட்டியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கி அதில் பணம் செலுத்தி வந்துள்ளனர். பணத்தை வங்கிக்காக வசூலுக்கு வரும் வங்கியின் தினசரி சேமிப்பு முகவராக பணிபுரிந்து வந்த சென்னை, திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (36) என்பவரிடம் கொடுத்து வங்கிக்கான நோட்டில் வரவு வைத்து வந்துள்ளார்கள். தங்கவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களது வங்கி கணக்கில் இதுவரை தலா ரூபாய் 7,71,000/- பணத்தையும் மேற்படி மகேந்திரன் ரூ7,79,000/- ரூபாய் பணத்தையும் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்கள்.ஆனால் கூட்டுறவு வங்கியில் மேற்படி 3 பேருக்கும் தலா ரூபாய் 1,70,,000/- பணம் மட்டுமே வரவு வைக்கப்பட்டது

we-r-hiring

இதே போன்று மேற்படி கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த தேவராஜ் என்பவர் ரூபாய் 3,76,000/- பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கணக்கில் ரூபாய் 500/- மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் இது போன்று பாதிக்கப்பட்டு பணத்தை இழந்துள்ளனர்.

இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த மேற்படி தங்கவேல், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மகேந்திரன் ஆகிய 3 பேரும் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணிபுரிந்து வந்த பிரேம்குமார் மற்றும் ஒருவரும் பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து பிரேம்குமாரை தேடி வந்தனர் இந்நிலையில் பிரேம்குமார் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வைத்து கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு நிலையம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரெடிட் கார்டு விவகாரத்தை தீர்த்து வைப்பதாக கூறி பணம் வாங்கி மோசடி-போலி வக்கீல் கைது!

MUST READ