புதுச்சேரி எம்பிபிஎஸ் சேர்க்கையில் என் ஆர் ஐ ஒதுக்கீட்டில் சீட்டு பெற, போலி தூதராக ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏஜெண்டுகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி, மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (nri) மற்றும் என் ஆர் ஐ ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத அடிப்படையில் 116 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு 4 கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. nri ஒதுக்கீடு இடங்களை பெற போலியான தூதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 44 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்கள் ரத்து செய்து, இது குறித்து லாஸ்பேட்டை போலீஸில் நிலையத்தில் சென்டர் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இதன் பேரில் 44 மாணவர்கள் மீதும் போலி ஆவணங்கள் தயாரித்தல், அதை உண்மை என சமர்ப்பித்தல் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இரண்டாம் கட்டமாக ஆறு சான்றிதழ் மற்றும் 25 சான்றிதழ் என 31 மாணவர்களும் போலி தூதராக சான்றிதழ் கொடுத்த தெரியவந்தது. இதை தொடர்ந்து போலி ஆவணம் சமர்ப்பித்த 31 மாணவர்கள் பட்டியல் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் 31 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களுக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையில் ஒட்டுமொத்தமாக மாணவர்களுக்கு ஒரு சில ஏஜென்ட்கள் போலி தூதரக சான்றிதழ்கள் கொடுத்திருப்பது தெரியவந்தது. ஏஜெண்டுகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் – மோசடி கும்பல்