spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் - மோசடி கும்பல்

வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் – மோசடி கும்பல்

-

- Advertisement -

சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத்துறையில் வேலை என்று கூறி, படித்த இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல். சுங்கத்துறை வேலை என்று கூறி, 15 இளைஞர்கள் இடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த நபரை, பணம் கொடுத்து ஏமாந்தவர்களே, பிடித்து  போலீசில் ஒப்படைப்பு.வேலை வாங்கி தருவதாக  கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் - மோசடி கும்பல்

வேலை வாய்ப்பு ஆசை காட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம். வேலைவாய்ப்பு குறித்து, இந்திய விமான நிலைய ஆணையம் முறையாக, ஆணையத்தின் இணையதளத்திலும், முன்னணி பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யும். அதைப் பார்த்து முறையாக விண்ணப்பித்து, வேலை வாய்ப்பு பெறலாம். இதில் இடைத்தரகர்கள் யாரும் கிடையாது என்று, சென்னை விமான நிலையம் அறிவிப்பு.

we-r-hiring

சென்னை விமான நிலையத்தில் கை நிறைய சம்பளத்துடன் கவுரவமான வேலை என்று பொய்யான தகவல்களை, படித்த இளைஞர்கள் மத்தியில் பரப்பி, ஒரு கும்பல் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி தொடர்ந்து பணம் மோசடி செய்து வருகிறது. இந்த கும்பல் சமூக வலைதளங்கள் வாட்ஸ் அப் குழுக்கள் போன்றவைகளில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் முத்திரையை போலியாக பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறது.வேலை வாங்கி தருவதாக  கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் - மோசடி கும்பல்

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான நேர்முகத் தேர்வுகள் நடப்பதாகவும், அந்த அறிவிப்புகளில் வெளியிடப்படுகிறது. இதை நம்பி இளைஞர்கள் பலர், அதில் கொடுக்கப்பட்டுள்ள, செல்போன் எண்களை தொடர்பு கொண்டால், விண்ணப்ப படிவங்கள் ரூ.250 முதல் ரூ.500 வரை என்று கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்தப் பணத்தை, ஆன்லைன் மூலமாக செலுத்துகின்றனர். அதில் கணிசமான ஒரு தொகையை அந்த மோசடி கும்பல் பெறுகின்றது.

அதன்பின்பு அந்த இளைஞர்களை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு வரவழைத்து நேர்முகத் தேர்வு என்று நடத்துகின்றனர். சில நேரங்களில் அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களிலும் இதே போல் நேர்முகத் தேர்வுகள் நடத்தி, சிலரைத் தேர்வு செய்து, அவர்களிடம் மோசடியாக பல ஆயிரத்தில் இருந்து, லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றுக்கொண்டு, வேலை நியமன போலி அப்பாயின்மென்ட் ஆர்டர்களையும் கொடுத்து அனுப்புகின்றனர்.

அவைகளை உண்மையான அப்பாயின்மென்ட் ஆர்டர் என்று நினைத்து கொண்டு, சென்னை விமான நிலையத்திற்கு வேலையில் சேர்வதற்காக வரும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர், அது போலியான வேலை நியமன உத்தரவு என்பதை அறிந்து தங்களுடைய பணமும் பறிபோய் விட்டதே என்று கதறும் சம்பவங்கள் அவ்வப்போது, சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறது.

இதேபோல் சமீபத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையில், அதிகாரிகள் பணிக்கு ஆட்கள் தேவை என்று கூறி, சென்னை புறநகர் பகுதி சேர்ந்த தவான் (30) என்பவர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து அவர், தனக்குத் தெரிந்த நண்பர்கள், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் என்று 15 பேரிடம், ரூ.20 லட்சம் வசூல் செய்து, தவான் இடம் கொடுத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும், வேலை கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

வேலை வாங்கி தருவதாக  கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் - மோசடி கும்பல் வேலை வாங்கி தருவதாக  கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் - மோசடி கும்பல்                                       இதை அடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், விசாரித்த போது, சுங்கத்துறையில் அதை போன்று யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை. மேலும்  பணம் வாங்கிய தவான் என்பவர், ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்தவர், இப்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து  பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்,தவானைப் பிடித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு பணம் மீண்டும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன என்று ஏமாற்றி, படித்த இளைஞர்களிடம் பெருமளவு பணங்கள் மோசடி செய்வது, தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, படித்த இளைஞர்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு புதிதாக நியமனம் செய்வதாக இருந்தால், முறையாக இந்திய விமான நிலைய ஆணைய இணையதளத்தில், அது குறித்து விளம்பரங்கள் வெளியிடப்படும். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிரபலமான முன்னணி பத்திரிகைகளில், இந்திய விமான நிலைய ஆணைய முத்திரைகளுடன் விளம்பரங்களும் வரும். அவைகளைப் பார்த்த பின்பு, விண்ணப்பதாரர்கள் முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. மேலும் வேலை வாய்ப்புக்கு பணம் வாங்கும் முறையும் கிடையாது.

இந்திய விமான நிலைய ஆணையம் கேட்கும், அனைத்து தகுதிகளும் இருக்குமேயானால், வேலை வாய்ப்பு, தகுதி அடிப்படையில் கிடைக்கும். எனவே படித்த இளைஞர்கள் இதை போல் ஏமாறாமல் இருக்க வேண்டும். நாங்கள் இதுகுறித்து அவ்வப்போது வலைதளங்கள் மூலம் எச்சரிக்கைகள் செய்கிறோம். ஆனாலும் இளைஞர்கள் பலர் இதை போல் ஏமாறுகின்றனர். இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில், காவல்துறையிடம் ஏற்கனவே முறையாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த மோசடி கும்பலை காவல்துறையினர் தேடிக் கொண்டு இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

ஆபாச படத்தை வெளியிடுவேன்…பிரிந்த மனைவியை  மிரட்டிய கணவர் கைது

MUST READ