Homeசெய்திகள்க்ரைம்பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.

-

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அண்மை காலமாக வேலையை விட்டுவிட்டு தற்போது வேலை ஏதுமின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார். பொன்னேரி சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரியா (28). திருமணமான பிரியாவிற்கும், திருமணமாகாத கோபாலகிருஷ்ணனுக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதில் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததாகவும், பிரியாவிற்கு கோபாலகிருஷ்ணன் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரியாவிற்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் கோபாலகிரிஷ்ணனுக்கும் பிரியாவிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.

கடந்த சில நாட்களாக இருந்து வந்த தகராறு நேற்று மாலை தொலைபேசியில் பேசிய போது தீவிரமாக முற்றியுள்ளது. இதனையடுத்து பிரியா சென்னையில் வசிக்கும் தம்முடைய நண்பர் உதவியுடன் கூலிப்படையை அழைத்துள்ளார். இரவு பிரியா கூலிப்படையினருடன் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கோபாலகிருஷ்ணனின் பெற்றோரிடம் அவதூறாக தகாத வார்த்தைகளில் பேசிய பிரியா உங்களது மகனை ஒரு மணி நேரத்தில் தீர்த்து கட்டிவிடுகிறேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பிரியா கோபாலகிருஷ்னனை தேடிய போது பொன்னேரி நகராட்சி அலுவலகத்தின் அருகே இருந்துள்ளார். அப்போது அவரிடம் சென்று பிரியா பேசிய போது இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர்.

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.

சிறிது நேரத்தில் அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்து கோபாலகிருஷ்னனை தலை, கழுத்து என சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றுள்ளனர். இதில் கோபாலகிருஷ்ணன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் பொன்னேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய கோபாலக்ரிஷ்ணனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பொன்னேரி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுற்றுப்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு அளித்த தகவலின் பேரில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சென்னை புழலில் நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற பெண்ணை பிடித்து நடத்திய விசாரணையில் பொன்னேரியில் கூலி படையை வைத்து கள்ளக்காதலனை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து புழல் போலீசார் பொன்னேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்து பிடிபட்ட பெண்ணை ஒப்படைத்தனர். இதனையடுத்து பிரியாவை பொன்னேரி போலீசார் கைது செய்து பொன்னேரி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.

கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனுக்கும் பிரியாவிற்கு ஏற்பட்ட தகராறு என்ன, வேறு சிலருடன் தொடர்பில் இருந்தது மட்டுமே பிரச்சினைக்கு காரணமா, பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறா, கூலிப்படையினர் யார் என பிரியாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கொலையை அரங்கேற்றி இருசக்கர வாகனங்களில் தப்பியோடிய 4பேரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்றிரவு வீட்டிற்கு வந்து மிரட்டிய பெண் தங்களுடைய மகனை பிரித்துவிட்டதாக தாய் கண்ணீர் மல்க கதறியழுதது பார்ப்போர் நெஞ்சை கலங்க செய்தது. மேலும் கொலை நடைபெற்ற நகராட்சி அலுவலகம் அருகே போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை எனவும், வேறு இடத்தை சேர்ந்தவர்களை தங்களது தெருவுக்குள் வந்து அரிவாளை கொண்டு கொலை செய்ததாகவும், தங்களது குழந்தைகளுக்கும், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ