spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வேறு பெண்ணுடனான உறவை மறைத்து திருமணம்... தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

வேறு பெண்ணுடனான உறவை மறைத்து திருமணம்… தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

-

- Advertisement -

சென்னை வண்ணாரப்பேட்டையில் வேறு பெண் உடனான உறவை மறைத்து திருமணம் செய்துகொண்ட இளைஞர், அந்த உறவை கைவிட வலியுறுத்திய மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை தெருவைச் சேர்ந்தவர் பி.ஏ பட்டதாரியான 26 வயதுடைய திவ்யா. இவருக்கு கொருக்குப்பேட்டை முனுசாமி தெருவைச் சேர்ந்த வடிவேலு என்பவரை வரன் மூலம் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திவ்யா, கணவர் வடிவேலு வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

we-r-hiring

இந்த நிலையில், வடிவேலு வேறு ஒரு பெண்ணிடம் கடந்த 10 வருடங்களாக தொடர்பில் இருப்பது திவ்யாவுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கணவன் வடிவேலுவிடம் பலமுறை அவளை விட்டு விடுங்கள் என்று திவ்யா கூறியுள்ளார். ஆனால் வடிவேலு, அவருடனான தொடர்பை விட்டு விடுவதாக கூறி மறுபடியும் கள்ள காதலியுடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார். இதனா‌ல் மனமுடைந்த திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். ஆனால் வடிவேலுவின் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் மகனுக்கு அறிவுரை கூறாமல் ஒழுங்கா வாழு, இல்ல உன் வீட்டுக்கு போ என திவ்யாவை வீட்டைவிட்டு விரட்டினர்.

கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கிய திருநங்கை

இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி அன்று திவ்யா, தான் 45 நாட்கள் கருவுற்றிருந்ததை கணவர் வீட்டில் சென்று தெரிவித்தபோது, அவர்கள் கருவை கலைத்துவிடு என்று கூறியுள்ளனர். மேலும், வடிவேலு வீட்டிற்கு சென்று திவ்யாவின் முடியை இழுத்து பிடித்து இரும்பு தடி கொண்டு மிருகத்தனமாக வெளியே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தான் கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றுவேன் உன்னால் முடிந்தால் தடுத்து பார் என ஏளனமாக பேசியுள்ளார்.

thondaiyarpet

இதனால் மனமுடைந்த திவ்யா தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் வடிவேலுவை கைதுசெய்து நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வடிவேலுவின் உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ