Homeசெய்திகள்க்ரைம்நிறுவனத்தில் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை:  அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

நிறுவனத்தில் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை:  அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

-

- Advertisement -

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.நிறுவனத்தில் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை:  அதிகாரிக்கு ஜாமீன் மறுப்புசென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேல், அங்கு பணியாற்றிய பெண்ணிடம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு தருவதாக கூறி,  பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதையடுத்து,  பணியில் இருந்து விலகிய அந்த பெண், அடையார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட  சக்திவேல், ஜாமீன்  கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சக்திவேல் தரப்பில், கடன் கேட்டு பணம் கொடுக்க மறுத்ததால்  பொய்யான பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில்,  விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், சக்திவேல் மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் அமெரிக்க குடியுரிமை வாங்கி வைத்திருப்பதால் அங்கு தப்பி செல்லவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன், சக்திவேலின் ஜாமீன்  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வேலைக்கு வந்த பெண்… உல்லாசமாக இருந்து நகை-பணம் பறிப்பு…-  ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது!

MUST READ