Homeசெய்திகள்க்ரைம்பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்துக் கொன்ற மகன்!

பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்துக் கொன்ற மகன்!

-

பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்துக் கொன்ற மகன்!

சிவகாசி அருகே பெட்ரோல் ஊற்றி தந்தையை தீ வைத்து எரித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அருகே வெம்ப கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணசாமி( வயது 60). இவரது மனைவி மாரியம்மாள் (வயது 55). மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வரும் இந்த தம்பதிகளுக்கு, கருப்பசாமி( வயது 35), சஞ்சீவிகுமார்( வயது 32) ஆகிய 2 மகன்களும், முத்துச்செல்வி( வயது 30) என்ற மகளும் உள்ளனர். சஞ்சீவிகுமார் திருமணமாகி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். முத்து செல்விக்கும் திருமணமாகிவிட்டது.

மூத்த மகன் கருப்பசாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கிருஷ்ணசாமி அன்றாடம் மது போதையில் குடித்துவிட்டு வீட்டில் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் கருப்பசாமி தந்தையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த முதியவர் கிருஷ்ணசாமி உயிருக்கு போராடும் நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நள்ளிரவில் உயிரிழந்தார்.

Fire

தகவல் அறிந்த வெம்ப கோட்டை போலீசார் சம்பவ கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரித்து தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மகனை கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் கோட்டையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

MUST READ