Homeசெய்திகள்க்ரைம்கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரோடு காவல் நிலையத்தில் சரண்

கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரோடு காவல் நிலையத்தில் சரண்

-

- Advertisement -

அபிஷேக் நிறுத்திய காரை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினா் விசாரணை மெற்கொண்டு வந்த நிலையில் கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் காரோடு காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளனா். The teenagers involved in the car hijacking came to the police station with their car

கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி கோவைக்கு வந்துள்ளார். கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அபிஷேக் தனது காருக்கு பதிலாக அங்கு நின்றுகொண்டு இருந்த வேறு காரை எடுத்து சென்றுள்ளார். கார் குனியமுத்தூர் வரும்போது பெட்ரோல் நிரப்புவதற்கு அங்குள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தும்போதுதான் வாகனத்தை மாற்றி எடுத்துவந்தது தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து வாகன எண்ணை வைத்து காரின் உரிமையாளரிடம் கார் ஒப்படைக்கப்பட்டதுடன். அபிஷேக்கை போலிசார் விசாரித்து அவரது வீட்டிற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து அபிஷேகின் தந்தை காவல் நிலையம் வந்து அபிஷேக்கை மீட்டுள்ளார். இந்த நிலையில் அபிஷேக் நிறுத்திய கார் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளது தெரியவந்ததையடுத்து, ராமநாதபுரம் போலிசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அராபஸ், மற்றும் போத்தனூர் பகுதியை சேர்ந்த இஷான் அகமது ஆகியோர் காருடன் வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.  காரை திருடி சென்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலிசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

முதியவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி…! அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு!

MUST READ