தமிழக முழுவதும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முக்கிய கொள்ளை கும்பல் ராசிபுரத்தில் கைது. ராசிபுரம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது பிடிபட்ட கொள்ளை கும்பலைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மாவுகட்டு.
தமிழகத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் இருசக்கரத்தில் வந்த போது ராசிபுரம் போலீசார் வளைத்துப் பிடித்து கைது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பிரிவு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது தப்பி ஓட முயன்ற கொள்ளை கும்பலை துரத்தி பிடித்தனர். இதில் தப்பி ஓடிய 2 கொள்ளையர்கள் கீழே விழுந்து கை கால் உடைந்தது மாவு கட்டு போடப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இதில் சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற டேவிட்(24) இவர் மீது சுமார் 12 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) மீது சுமார் 74 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தியபோது போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்ற இரண்டு கொள்ளையர்களும் கீழே விழுந்ததில் கை கால் உடைந்து மாவுகட்டு போடப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் .
இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்ததில் சென்னையைச் சேர்ந்த மணி மீது ஒரு திருட்டு வழக்கு உள்ள நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் குறித்து விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.