spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது - நகைகள் பறிமுதல்

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது – நகைகள் பறிமுதல்

-

- Advertisement -

அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. 15.3 கிராம் தங்க நகைகள் பறிமுதல்வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது - நகைகள் பறிமுதல்

சென்னை, ஷெனாய் நகர், கிரசண்ட் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் நீரஜா, பெ.வ/31, க/பெ.தீபக் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை சரிபார்த்த போது, சுமார் 30 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் சில பொருட்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இது குறித்து நீரஜா அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

we-r-hiring

K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வேலைக்கார பெண்மணி பவானி (எ) லட்சுமி பவானி, பெ./30, க/பெ.துர்கா பிரசாத், மனோகரன் தெரு, சேத்துப்பட்டு,(பூர்வீகம் ஆந்திரா) சென்னை என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 15.3 கிராம் எடை கொண்ட புகார்தாரரின் மோதிரம், கம்மல் ஆகிய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட விசாரணையில்  லட்சுமி பவானி மேற்படி புகார்தாரர் வீட்டில் சுமார் 2 வருடங்களாக வேலை செய்து வருவதும், லட்சுமி பவானி புகார்தாரர் வீட்டிலிருந்து சிறிது சிறிதாக தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விற்றும், அடமானம் வைத்தும் செலவு செய்துள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட லட்சுமி பவானி விசாரணைக்குப் பின்னர் நேற்று (03.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

APCnewstamil

MUST READ