Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு- 8 பேர் பலி

சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு- 8 பேர் பலி

-

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாகங்கா – பாமுரு சாலையில் உள்ள கந்துகூரில் உள்ள என்டிஆர் சந்திப்பு அருகே தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு, இதி ஏமி கர்மா எனும் நிகழ்ச்சியில் வேனில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் திரண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்திரபாபு இருந்த வாகனத்தில் அருகே செல்ல பலர் செல்ல முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக சந்திரபாபு நாயுடு தனது உரையை நிறுத்திவிட்டு காயம் அடைந்தவர்களை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் அவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்பை தெலுங்கு தேச கவனித்துக்கொள்ளும் என்று சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.

MUST READ