Homeசெய்திகள்இந்தியாநிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்.... மன்னிப்புக் கோரிய கன்னட நடிகர் சிவராஜ் குமார்!

நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்…. மன்னிப்புக் கோரிய கன்னட நடிகர் சிவராஜ் குமார்!

-

 

கன்னட அமைப்பினரால் நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு, நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக் கோரினார்.

‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்- விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனது சித்தா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் சித்தார்த் பேசிக் கொண்டிருந்த போது, கன்னட அமைப்பினர் அரங்கத்திற்குள் நுழைந்தனர். கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தர வலியுறுத்தும் நிலையில், சினிமா விளம்பர நிகழ்ச்சி தேவையா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர்களுக்கு கன்னடத்திலே பதிலளிக்க முயன்ற சித்தார்த்தின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் சித்தார்த் பாதியில் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்காக, அவரிடம் சிவராஜ்குமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

காவிரி பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுக் காண வேண்டும்; யாரையும் குற்றஞ்சாட்டக் கூடாது என நடிகர் சிவராஜ் குமார் கூறினார்.

கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமாருக்கு, கர்நாடகா மாநிலத்தில் பெரும் மதிப்பும், செல்வாக்கும் உள்ள நிலையில், அவரது இந்த கருத்து வெளியாகியுள்ளது.

MUST READ