போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளதாக அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் தெரிவித்தள்ளாா்.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர் ரக பயணிகள் விமானம் நேற்று (13.06.2025) பகல் 1.39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற விமானம் சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்தது மெகானி நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியின் உணவகக் கட்டத்தின் மீது விழுந்து நொறுகியது. இந்த விபத்தில் ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த நிலையில் இதுவரை 269 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விபத்து நடந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க உதவும் கருப்பு பெட்டியை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக ஏர் இந்திய தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து குறித்த போயிங் விமானத்தில் குறைபாடு உள்ளது என்ற உண்மையை உடைத்துள்ளாா் அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர். அவர் கூறியதாவது, ”போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளேன். அதன் உற்பத்தியில் சில குறைபாடுகளை கவனித்தேன், 2 Fuselage எனப்படும் விமான பாகங்களை இணைக்கும்போது, சரியான இணைப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை.
பொருந்தாத பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரி செய்தனர். ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பின் இந்த குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும். மாசுபடிந்த குழாய்கள் விமானத்தின் ஆக்ஸிஜன் அமைப்பில் பொருத்தப்படுகின்றன, அவை முறையாக சுத்திகரிக்கப்படாவிட்டால் பெரும் வெடி விபத்துக்கு வழிவகுக்கும்.”என்று போயிங் விமானத்தில் இருக்கும் குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளாா். ”