அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 22- ஆம் தேதி மகரிஷி வால்மீகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இதுவரை 40- க்கும் மேற்பட்ட சார்ட்டர்ட் விமானங்கள் அனுமதி கோரியுள்ளனர்.
மழை வெளுக்க போகுது!…மீண்டும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
வரும் ஜனவரி 22- ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்க 6,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிற நாடுகளுக்கான இந்திய தூதர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக, அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், சில நாட்களுக்கு முன்பே திறக்கப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ குழும தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களின் தனி நபர் விமானங்கள் தரையிறங்க அனுமதிக் கோரி, அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, இதுவரை 40- க்கும் மேற்பட்ட சார்ட்டர்ட் விமானங்கள் தரையிறங்க கோரிக்கை கடிதங்கள் கிடைக்கப் பெற்றதாகவும், இது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பயணிக்கும் விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்படவுள்ளதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக தனிநபர் விமானங்கள் நிறுத்தி வைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகியுள்ளது.