வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 34 வழித்தடங்களில் அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் இடையே இயக்கப்பபட்டுவரும், வந்தே பாரத் ரயில் பில்வாரா அருகே சென்றுகொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் இருபுறத்திலும் வரிசையாக கற்கள் இருந்ததை ரயில்வே அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அவர்கள், உடனடியாக வந்தே பாரத் ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயில் செல்லும் தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பை கொண்டு விபத்து ஏற்படுத்த இருந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் pic.twitter.com/fdzIGfyvvX
— prasanna cp (@cp_prasanna) October 3, 2023
இதையடுத்து அவர் அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தி விபத்தை தவிர்த்தார். விசாரணையில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க யாரோ வேண்டுமென்றே சதி செய்தது தெரியவந்தது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கற்களுக்கு மிக அருகே வந்தே பாரத் ரயில் நிற்பது தெரியவந்துள்ளது. கற்கள் மட்டுமன்றி, தண்டவாளத்தில் இரும்பு ராடுகளும் சொருகப்பட்டிருந்தது. ஒருவேளை அதிகாரிகள், வந்தே பாரத் ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளிக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் வந்தே பாரத் ரயில் கவிழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.