Homeசெய்திகள்இந்தியாடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

-

 

சிறையில் வாடும் மணீஷ் சிசோடியா- கண்கலங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
Photo: ANI

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

கோவையில் அண்ணாமலை போட்டி- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியிருந்தது. எனினும், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், தன்னை கைது செய்யக்கூடாது என்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இன்று (மார்ச் 21) இரவு 09.30 மணியளவில் அமலாக்கத்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

அமலாக்கத்துறையால் கைதான முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (மார்ச் 22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!

டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ