- Advertisement -
பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பிபிசி மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தில்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி நிறுவனம், கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டது. அதில், அப்போதைய குஜராத் முதல்வர் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி எடுக்கப்பட்டிருந்ததாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அந்த சூழலில் கடந்த சில உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பிபிசி மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தில்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய முறையாக அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிபிசி பணியாளர்களுக்கும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.