அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.ஹரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.தொடர்ந்து பிற்பகல் 12:30 மணியளவில், யமுனாநகரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
விமானப் பயணத்தை பாதுகாப்பானதாகவும், மலிவு விலையில் வழங்கக்கூடியதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் வகையில் ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தின் 410 கோடிக்கு மேல் மதிப்புள்ள புதிய முனையக் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஹிசாரில் இருந்து அயோத்திக்கு முதல் விமானத்தையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஹிசாரிலிருந்து அயோத்திக்கு (வாரத்திற்கு இரண்டு முறை), ஜம்மு, அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகருக்கு ஒரு வாரத்தில் மூன்று விமானங்கள் இயக்கப்படும். இந்த மேம்பாட்டின் மூலம், ஹரியானாவின் விமானப் போக்குவரத்து இணைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
யமுனாநகரில் தீன்பந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தின் 800 மெகாவாட் நவீன அனல் மின் நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, சுமார் 8,470 கோடி மதிப்புள்ள 233 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹரியானாவின் எரிசக்தி தன்னிறைவை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் கால்வனைசிங் ஆர்கானிக் பயோ-அக்ரோ ரிசோர்சஸ் தானைத் தொடர்ந்து, யமுனாநகரில் உள்ள முகராப்பூரில் ஒரு சுருக்கப்பட்ட பயோகேஸ் ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த ஆலை ஆண்டுக்கு 2,600 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் சுத்தமான எரிசக்தி உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அதே வேளையில் பயனுள்ள கரிம கழிவு மேலாண்மைக்கு உதவும்.
கூடுதலாக ரேவாரி நகர நெரிசலைக் குறைக்கும் வகையிலும் டெல்லி-நர்னால் பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும் வகையிலும் மேலும் இப்பகுதியில் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை அதிகரிக்கும் விதம் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 1,070 கோடி மதிப்பிலான 14.4 கி.மீ ரேவாரி பைபாஸ் திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
ஈபிஎஸ் மீது ஜெயக்குமாருக்கு அதிருப்தி? தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பதிவால் சர்ச்சை!