spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர்…

41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர்…

-

- Advertisement -

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 விண்கலம். இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள், ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இன்று (ஜூன் 25) நண்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் இருந்து புறப்பட்டனர்.41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர்…41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி புறப்படுகிறார். இந்த பயணத்தின் மூலம் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 1984ல் சோவியத் யூனியனின் சோயுஸ்-11 மூலம் விண்வெளிக்கு சென்ற ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர் ஆவார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11-ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது. மோசமான வானிலை ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோளாறு காரணமாக இந்த திட்டம் 6 முறை ஒத்தி வைக்கப்பட்டு, “விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றன மற்றும்,வானிலை 90% சாதகமான நிலையில் உள்ளது” என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்தை அடுத்து இன்று உலகமே உற்று நோக்கி வரும் ஆக்சியம் 4 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

we-r-hiring

41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர்…

இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 வீரர்களும் 14 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு விஞ்ஞான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் மணிக்கு 7000 கிலோ மீட்டர் எட்டிய பின் படிப்படியாக அதன் வேகம் குறைக்கப்பட்டது.

சுபான்ஷூ சுக்லாவின் குடும்பத்தினர் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேரலை பார்க்கும் போது பெருமை மற்றும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.1984 சோவியத் யூனியனின் சோயுஸ் 11 ராக்கெட் மூலம் விண்வெளி சென்றார். ராகேஷ் ஷர்மா அவருக்கு பிறகு வரலாறு படைக்க உள்ளாா் சுபான்ஷூ சுக்லா.

சிறுவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

MUST READ