Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!

கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!

-

 

கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!
File Photo

கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

‘உலக சிக்கன நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 27- ஆம் தேதி தொடங்கிய மூன்று நாட்கள் கூட்டத்தில் 2,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்படி? என கேரளா மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகத்துடன் ஆவின் பால் பாக்கெட்கள்

கேரளா குண்டு வெடிப்பில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறும் கேரளா மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், களமச்சேரி, எர்ணாகுளம், கோட்டயம் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ