Homeசெய்திகள்இந்தியாமக்களவைத் தேர்தல் தேதியை நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் தேதியை நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

-

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை நாளை (மார்ச் 16) அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு….மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி, தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவைக் குறித்து டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை (மார்ச் 16) பிற்பகல் 03.00 மணியளவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியையும் அறிவிக்கவுள்ளது. தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெளியான உடனே நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ