
சபரிமலையில் நாளை மறுநாள் (டிச.27) மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
பயமுறுத்த வருகிறது டிமான்ட்டி காலனி 2…. ரிலீஸ் குறித்த அப்டேட்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16- ஆம் தேதி நடைத் திறக்கப்பட்டது. தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் நேற்று முன்தினம் (டிச.23) ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்ட நிலையில், நாளை (டிச.26) சபரிமலையைச் சென்றடைந்து, டிசம்பர் 27- ஆம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து, டிசம்பர் 30- ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடைத் திறக்கப்படும். இந்த நிலையில், மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 01- ஆம் தேதி முதல் உடனடி தரிசன முன்பதிவை 15,000 ஆக அதிகரிப்பது தொடர்பாக, கேரள அரசு ஆலோசனை நடத்தி வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தானம்!
மண்டல பூஜை வரும் டிசம்பர் 27- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாளை (டிச.26) ஆன்லைன் முன்பதிவு 64,000 ஆகவும், டிசம்பர் 27- ஆம் தேதி 70,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.