Homeசெய்திகள்இந்தியாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது மணிப்பூர் சட்டப்பேரவை!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது மணிப்பூர் சட்டப்பேரவை!

-

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது மணிப்பூர் சட்டப்பேரவை!
Photo: Manipur Assembly

மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்புக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது..

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், பெரும் எதிர்ப்பு மத்தியில் மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

அவை கூடியதும், வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இந்த கூட்டத்தொடரை ஐந்து நாட்களுக்கு நீட்டிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்- நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல்..

அதைத் தொடர்ந்து, அமளியிலும் ஈடுபட்டதால், தேதி குறிப்பிடப்படாமல் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

MUST READ