Homeசெய்திகள்இந்தியாதிருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  - தேவஸ்தானம்

திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  – தேவஸ்தானம்

-

 

திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  - தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

டிக்கெட் இல்லாமல் நேரடியாக  தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனைத்து அறைகளும் நிரம்பிய நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதே போல் இலவச நேரம் ஒதுக்கீடு பெற்றவர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இனி வருவோர் கோயிலை சுற்றியுள்ள தேவஸ்தான இலவச லாக்கரில் உடைமைகளை வைத்து விட்டு ஆங்காங்கே தங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஏழுமலையான் கோயிலுக்கு இனிமேல் வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இனிமேல் வரும் பக்தர்கள் காலை 6:00 மணிக்கு பிறகு தரிசனத்திற்கான வரிசையில் அனுமதிக்கப்படுவர் எனவும் மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

MUST READ