Homeசெய்திகள்இந்தியாராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது

ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது

-

- Advertisement -

ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது

ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் இன்று, நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.

parliament

ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றம் முடங்கியது. மக்களவை தொடங்கிய 20 வினாடிகளில் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடங்கிய ஒரு நிமிடத்தில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Protest

முன்னதாக டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஊர்வலமாக சென்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாய்மையே வெல்லும் என்ற பேனர்களை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோடி- அதானி என்பதை மோதானி என்று பேனரில் எழுதி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டன.

MUST READ