
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்.

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசுக் கட்டிக் கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை. ஜப்பான் நிறுவனத்தின் கடன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாகக் கட்டப்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமடைந்துள்ளது.
பிற மருத்துவமனைகளை விட தமிழகத்தில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக் கூடுதல் படுக்கை வசதிகளைக் கொண்டது. பிற எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் உள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக 150 படுக்கை வசதிகள் செய்து தரப்படவுள்ளது. தமிழகத்தைப் பற்றி நான் பேச நிறைய இருக்கிறது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரும் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது, காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அதீத கவனம் செலுத்தி வருகிறார். தென்னிந்தியாவில் ஆறு வந்தே பாரத் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி
தமிழகத்தில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்ளக் கூடாது என்ற திணிப்பு இருந்தது. மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதாக கூறுவோர், தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் தான்” என்று குற்றம்சாட்டினார்.
இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மாநில அரசே காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.