spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!

4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!

-

- Advertisement -

4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார், பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். மேலும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் வெற்றி பெற்று ராகுல்காந்தி எதிர்கட்சி தலைவரானார்.

அதன் பின்னர் உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர விருப்பம் தெரிவித்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் அறிவிக்கப்பட்டது.

4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!

இது நாள் வரையில் காங்கிரஸ் கட்சியின் இதர மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்களுக்கு வாக்கு சேகரித்து வந்த பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். முதன்முறையாக தன்னுடைய வெற்றிக்காக வாக்கு சேகரித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது அவரைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தான் சந்தித்த முதல் தேர்தல் களத்தில் அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

MUST READ