
சபரிமலைச் செல்லும் ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக ‘அய்யன்’ என்ற செயலியை கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!
கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த ‘அய்யன்’ செயலி மூலம் யாத்திரை செல்லும் வனப்பகுதிகளில் கிடைக்கும் சேவைகள் குறித்து எளிதாக அறிந்துக் கொள்ள இயலும். இணையதள வசதிகள் இல்லாத சூழலிலும் இயங்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருக்கும் இடத்தில் இருந்து கோயிலில் தொலைவு, அவசர மருத்துவ உதவிக்கான தொலைபேசி எண், குடிநீர் மையங்கள் இருக்கும் இடங்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த செயலில் இடம் பெற்றுள்ளன. யாத்திரையின் போது, பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சடங்குகள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் உள்ளன.
வெங்காயத்தாள் சாதம் செய்வது எப்படி?
மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த செயலியில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.