வாக்கு எண்ணிக்கை தீவிரம்… ஆந்திராவில் 114 தடை அமல்…
- Advertisement -

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அடுத்து இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. தபால் வாக்குகளில் 8 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.