தேங்காய் தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.
இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட தேங்காய் தண்ணீரில் பொதுவாக பல முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் தேங்காய் தண்ணீரானது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும் இது நீரிழப்பை கட்டுப்படுத்துவதோடு மலச்சிக்கலையும் தீர்க்க உதவுகிறது. மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்ததாக இருக்கும் நிலையில் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்காது. இது தவிர சிறுநீரக கற்களையும் வெளியேற்ற உதவுகிறது. இந்நிலையில் தேங்காய் தண்ணீர் உடன் சப்ஜா விதைகளை கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது சப்ஜா விதைகளில் அதிகம் உள்ள ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வை உண்டாக்குகிறது. இதனால் மற்ற உணவு பொருட்களின் மீதான நாட்டம் குறையும். அதுமட்டுமில்லாமல் சப்ஜா விதைகளில் குறைவான அளவில் கலோரிகள் இருப்பதால் இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவிகிறது. இது தவிர சப்ஜா விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
எனவே தேங்காய் தண்ணீர் மற்றும் சப்ஜா விதைகள் ஆகிய இரண்டையும் கலந்து குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைப்பதோடு, கொழுப்பை எரிக்கும் சிறந்த பானமாகவும் விளங்குகிறது.