கர்ப்பத்தின் போது கருவில் குழந்தை வளர வளர கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படும். இது இன்சுலின் செயல்பாட்டை தடை செய்யப்படும். குழந்தையின் பாதுகாப்பிற்காக ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. ஆனால் இது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இது தவிர குடும்பத்தில் சர்க்கரை நோய் வரலாறு இருந்தாலோ, உடல் எடை அதிகமாக இருந்தாலோ, உணவு பழக்கவழக்கங்களை கட்டுப்பாடு இல்லாமல் இருந்தாலோ கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உண்டாகும். எனவே கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து தங்களின் சர்க்கரை அளவினை பரிசோதிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயை தடுப்பதற்கான வழிகள்.
கர்ப்பிணி பெண்கள் தினமும் நடை பயிற்சி செய்ய வேண்டும். முதல் மூன்று மாதத்தில் மிதமான நடைப்பயிற்சி செய்தால் போதுமானது. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை வேண்டும். தினமும் நடைபயிற்சி செய்வதனால் இன்சுலின் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கும்.
அதே சமயம் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த உணவுகளையும் நார்ச்சத்து, புரோட்டின் அதிகமுள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. அதன்படி இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இது சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். (அதாவது ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், சிறிது சிறிதாக நாளொன்றுக்கு 5 முறை கூட சாப்பிடலாம்).
மேலும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். யோகா, தியானம் போன்ற செயல்களினால் மன அழுத்தம் கட்டுப்படும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதே தவிர தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இது உடலில் இருந்து தேவையற்ற சர்க்கரை கழிவுகளை வெளியேற்ற உதவும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.