சீரகம் என்பது சமையலுக்கு சுவையும் மணமும் தரக்கூடியது. பலவிதமான மசாலா பொடிகளில் சேர்க்கப்படும் முக்கியமான பொருட்களில் சீரகமும் ஒன்றாகும். அதேசமயம் சீரகத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. இதை சாப்பிடுவதனால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்து வந்தால் மயக்கம் தலைச்சுற்றல் போன்றவை சரியாகும்.
திராட்சை பல ஜூஸ் உடன் சீரகத்தை கலந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
தயிரை விட மோர் உடலுக்கு குளிர்ச்சியை தரும். அதன்படி மோரில் சீரகம், இஞ்சி, சிறிதளவு உப்பு சேர்த்து பருகி வருவதனால் வாயு தொல்லையை சரி செய்யலாம்.
100 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தை சேர்த்து கொதிக்க விட்டு அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும். கேரளாவில் பெரும்பாலானவர்கள் இந்த தண்ணீரை தான் உணவு உண்ட பின் குடித்து வருகின்றனர்.
சிறிதளவு சீரகம், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு ஆகியவற்றை சேர்த்து மென்று சாப்பிட்டு , ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வந்தால் வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சனைகள் குணமடையும்.
இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.
சீரகம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் தேகத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.