Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கிழங்குகளிலேயே சிறந்த கிழங்கு கருணைக்கிழங்கு!

கிழங்குகளிலேயே சிறந்த கிழங்கு கருணைக்கிழங்கு!

-

- Advertisement -

கிழங்குகளிலேயே சிறந்த கிழங்கு கருணைக்கிழங்கு!

கிழங்குகளிலேயே சிறந்த கிழங்கு கருணைக்கிழங்கு என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இந்த கருணைக்கிழங்கு மூல நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் சித்த மருத்துவத்தில் மூலநோய்க்காக கொடுக்கப்படும் லேகியத்தில் கருணைக்கிழங்கு லேகியம் மிகவும் முக்கியமானது.

மேலும் இது உடல் உஷ்ணத்தை தணிக்கவும் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கவும் பயன்படுகிறது.கிழங்குகளிலேயே சிறந்த கிழங்கு கருணைக்கிழங்கு!

கருணைக்கிழங்கின் தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு போட்டு அதனை நீரில் வேக வைக்க வேண்டும். இப்போது வேகவைத்த கருணைக்கிழங்கை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெண் 6 முதல் 7 காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு சிறங்கை தேங்காய் பூ ஆகியவற்றையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து வைத்த அனைத்தையும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் உப்பு, புளி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இதனை மூலநோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறைந்து மூலநோய் குணமாகும். அதே சமயம் மூலநோய் வராமலும் தடுக்கலாம்.

இருப்பினும் இம்முறைகளை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.கிழங்குகளிலேயே சிறந்த கிழங்கு கருணைக்கிழங்கு!

குறிப்பு:
கருணை கிழங்கினை குழம்பாகவும், பொரியல் அல்லது வறுவலாகவும் செய்து சாப்பிடலாம். ஆனால் மூலநோய் உள்ளவர்கள் காரம் குறைவாக செய்து சாப்பிடுவது சிறந்தது.

 

MUST READ