spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்'குற்றவாளி' ராகுல்காந்தி - குறிப்பிட்டுச்சொல்லும் பாஜக

‘குற்றவாளி’ ராகுல்காந்தி – குறிப்பிட்டுச்சொல்லும் பாஜக

-

- Advertisement -

ra

இரண்டு வருடங்கள் சிறை தண்டனை பெற்ற ஒரு ‘குற்றவாளி’ ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி கன்னியாகுமரி மாவட்ட பாஜக அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்த;நுழைய முயன்ற காங்கிரஸ் குண்டர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. அவர் மேலும், அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளின் முன் தாக்குதல் நடத்துவது அராஜகம் மட்டுமல்ல, ஜனநாயக விரோதமும் கூட என்கிறார்.

we-r-hiring

bj

ராகுல் காந்தி எம்பியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட வடிவங்களில் இந்த போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலையில் நாகர்கோவில் மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

பாஜக அலுவலகத்தின் அருகில் செல்லும் போது அவர்கள் மோடிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் பாஜக தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டார்கள். இதையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் சிலர் பாஜக அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தனர்.

இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பாஜக கொடிகளும் வாகனங்களும் தீக்கிரையாகின . கட்சி வாசலின் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கடும் சேதம் அடைந்தன. பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . நாகர்கோவிலில் இந்த சம்பவத்தால் பதற்றம் இருந்து வருகிறது.

இந்த சம்பவத்தை முன்வைத்தே, காங்கிரஸ் குண்டர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நாராயணன் திருப்பதி.

MUST READ