spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!

“குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு…..”- அண்ணாமலை ட்வீட்!

-

- Advertisement -

 

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

ஆவின் பால் நிறுவனம், குடிநீர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளியை ஆவின் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

we-r-hiring

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2014-2015- ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, தி.மு.க.வினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.

குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைக் கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ