Homeசெய்திகள்அரசியல்அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?

அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?

-

- Advertisement -

குடி­யேற்­றம், வெளி­நாட்­ட­வர் மசோ­தாவை மக்­க­ள­வை­யில் கொண்டு வந்து நிறை­வேற்றி இருக்­கி­றார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா. இந்­தச் சட்­டம், அவர் முன்­னர் கொண்டு வந்த குடி­யு­ரி­மைச் சட்­டத்­துக்கே எதி­ரா­னது என்­ப­து­தான் உண்மை. அமித்ஷா சட்­டத்­துக்கு எதி­ராக அமித்­ஷாவே சட்­டம் கொண்டு வந்து நிறை­வேற்றி இருக்­கி­றார். இந்த முரண்­பா­டு­களை மொத்­த­மா­கக் கொண்­ட­து­தான் ஒன்­றிய பா.ஜ.க. அரசு.அம்பேத்கரை யாராலும் வெறுக்க முடியாது.... பா. ரஞ்சித் பேட்டி!

கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று மக்­க­ள­வை­யில் குடி­யேற்­றம், வெளி­நாட்­ட­வர் மசோதா ஒன்று நிறை­வேறி இருக்­கி­றது. வெளி­நாட்­டில் இருந்து இந்­தியா வரு­ப­வர்­களை முறைப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்­ட­மாக இது கொண்டு வரப்­ப­டு­கி­றது. குடி­யேற்­றம், வெளி­நாட்­ட­வர் இந்­தியா வருகை, தங்­கு­தல், சொந்த நாட்­டுக்­குத் திரும்­பு­தல் ஆகி­ய­வற்றை முறைப்­ப­டுத்­து­தல் தொடர்­பான முன்­வ­ரைவு இது. மார்ச் 11 ஆம் தேதி இது மக்­க­ள­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. தி.மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­க­ளின் கடும் எதிர்ப்­புக்கு இடை­யில் இதனை நிறை­வேற்­றி­ விட்­டார்­கள்.

இந்த சட்­டத்­தின்­படி, வெளி­நாட்­ட­வர் வருகை, தங்­கு­தல், புறப்­பாடு ஆகிய அனைத்­தும் ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்டு வரப்­பட்டு விட்­டது. ‘இந்­தி­யா­வில் தஞ்­சம் அடைந்­துள்ள 90 ஆயி­ரம் இலங்­கைத் தமி­ழரை இது பாதிக்­கும்’ என்று தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி குற்­றம் சாட்­டி­னார். ‘நியா­ய­மான கார­ணங்­க­ளுக்­காக சொந்த நாட்­டை­யும் உடை­மை­க­ளை­யும் விட்டு தப்­பி­வந்து தஞ்­சம் கோரும் மக்­க­ளைப் பற்றி இந்­தச் சட்­டம் கவ­லைப்­ப­ட­வில்லை’ என்­ப­தை­யும் உணர்த்­தி­னார். “ஆளும் கட்­சி­யின் கொள்­கை­க­ளு­டன் உடன்­ப­டாத வெளி­நாட்­ட­வர் வரு­கை­யைத் தடுக்க இத­னைக் கொண்டு வந்­துள்­ளீர்­கள்” என்று காங்­கி­ரஸ் கட்சி குற்­றம் சாட்­டி­யது.

“வர்த்­த­கம், கல்வி, முத­லீடு நோக்­கத்­துக்­காக இந்­தி­யா­வுக்கு வருகை தரும் வெளி­நாட்­ட­வர் எப்­போ­தும் வர­வேற்­கப்­ப­டு­வர். ஆனால் இந்­திய நாட்­டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்று உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, மக்­க­ள­வை­யில் பேசி இருக்­கி­றார். “இந்­தி­யா­வுக்கு வருகை தரும் ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ரின் தக­வ­லைப் பெறு­வ­தை­யும், அத்­த­க­வல் முழு­மை­யா­கக் கண்­கா­ணிக்­கப்படு­வ­தை­யும், இந்த மசோதா உறுதி செய்­யும். குடி­யேற்­றம் என்­பது நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும் பல்­வேறு பிரச்­சி­னை­ க­ளு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ளது” என்று பேசி­னார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா.

‘இந்­தியா என்­பது எவர் வேண்­டு­மா­னா­லும் வந்து, இல­வ­ச­மா­கத் தங்­கும் தர்ம சாலை அல்ல’ என்று கொந்­த­ளித்­துப் பேசி இருக்­கி­றார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா.

இதே அமித்ஷா அவர்­கள், குடி­யு­ரி­மைச் சட்­டம் என்ற கருணைமிக்க சட்­டத்தை வடித்­துக் கொடுத்­தாரே? அதன் நோக்­கம் என்ன? ‘இந்­தியா என்­பது தர்­ம­சா­லை­தான், வாங்கோ, வந்து தங்­கிக்­கோங்கோ’ என்­ப­து­தானே அந்த சட்­டத்­தின் நோக்­கம்?

இசு­லா­மிய மக்­க­ளை­யும், இலங்­கைத் தமி­ழர்­க­ளை­யும் நீக்கி விட்டு கருணை பொங்க ஒரு சட்­டத்தை அன்­றைக்கு நிறை­வேற்­றி­னீர்­களே? அப்­போது, ‘பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நாடு இந்­தியா’ என்று சொல்­ல­வில்­லையா?

ஒன்­றிய அர­சின் குடி­யு­ரி­மைச் சட்­ட­மா­னது இந்­தி­யா­வுக்­குள் யார்எல்­லாம் வர­லாம், வந்­தால் யாருக்­கெல்­லாம் குடி­யு­ரிமை வழங்­கப்­ப­டும் என்று வரை­ய­றுத்­தது. பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான், வங்­க­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் வர­லாம் என்­றும், அந்த நாட்­டைச் சேர்ந்த இசு­லா­மி­யர்­கள் நீங்­க­லாக மற்ற மதத்­தைச் சேர்ந்­த­வர்­கள் வர­லாம் என்­றும் சொன்­னார்­கள்.

பாகிஸ்­தா­னில் இருந்து, வங்க தேசத்­தில் இருந்து, ஆப்­கா­னிஸ்­தா­னத்­தில் இருந்து இசு­லா­மி­யர் நீங்­க­லான மற்ற மதத்­த­வர்­கள் வர­லாம் என்­றால் அண்டை நாடான இலங்­கை­யைச் சேர்ந்­த­வர்­கள் வர­லாமா? என்­றால் வரக்­கூ­டாது என்­ப­தைத் தடை செய்த சட்­டம் அது. இலங்­கைத் தமி­ழர்க்கு மாபெ­ரும் துரோ­கம் இழைத்­தது ஒன்­றிய பா.ஜ.க. அரசு.

அண்டை நாட்­டைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கு­கி­றோம்என்­றால் இலங்­கை­யைச் சேர்த்­தி­ருக்க வேண்­டும். அதைச் செய்­யவில்லை.மற்ற அண்டை நாட்­டைச் சேர்ந்த இந்­துக்­கள் வர­லாம் என்­றால் இலங்­கை­யில் இருக்­கும் தமி­ழர்­களை இந்­துக்­க­ளாக பா.ஜ.க. அரசு அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான், வங்­கம் ஆகிய நாடு­களை மட்­டும் குறிப்­பிட்டு இச்­சட்­டம் நிறை­வேற்­றப்­பட்டு இருப்­ப­தன் நோக்­கம் இஸ்­லா­மி­யர்­கள் அதி­கம் வாழும் நாட்­டில் உள்­நாட்டு குழப்­பம் ஏற்­ப­டுத்­து­வ­தற்­குத்­தான். முஸ்­லீம்­க­ளால் தொல்­லைக்­குள்­ளாக்­கப்­ப­டும் மற்ற மதத்­த­வ­ரைக் காப்­பாற்­று­வது இச்­சட்­டத்­தின் நோக்­கம் என்­றால், பவுத்த சிங்­களவர்­க­ளால் தமி­ழர்­கள் கொல்­லப்­ப­டு­வது பற்றி பா.ஜ.க. அரசு கவ­லைப்­ப­ட­வில்லை.

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

இப்­படி பல்­வேறு சதி­க­ளின் அடிப்­ப­டை­யில் குடி­யு­ரி­மைச் சட்­டத்தை நிறை­வேற்­றி­னார்­கள். ஈழத்­தில் இருப்­ப­வர்­கள் இனத்­தால் தமி­ழர்­க­ளாக இருந்­தா­லும் அவர்­க­ளது சமய நம்­பிக்கை இந்து – – சைவம் சார்ந்­த­து­தான். அவர்­களை திட்டமிட்டு புறக்­க­ணித்­தி­ருப்­பது இந்­துக்­க­ளா­கவே இருந்­தா­லும் ‘இந்து தமி­ழர்­கள்’ வேண்­டாம் என்ற வஞ்­ச­கம்­தான்.

பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான், வங்­கம் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த இஸ்­லா­மி­யர் நீங்­க­லாக யாரும் வர­லாம் என்று சொல்­வ­தற்கு ஒரு சட்­டம். ‘இந்­தியா தர்ம சாலை அல்ல’ என்று சொல்­வ­தற்கு இன்­னொரு சட்­டம். அமித்ஷாவுக்குத்தான் எத்­தனை முகங்­கள்?

MUST READ