Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை- டிடிவி தினகரன்

ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை- டிடிவி தினகரன்

-

ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை- டிடிவி தினகரன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடையில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து அமர்ந்திருந்தனர்.

Image

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க திமுக அரசை வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்கின்றனர். விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள். அச்சாணி முறிந்து போனவர்கள், டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள். aம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை… ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை” என்றார்.

MUST READ