மோடி,அமித்ஷாவுடன் முதல்வர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு.ஆந்திராவில் சட்டப்பேரவையை களைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஊழல் வழக்கில் கைதானதை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் இன்று டெல்லி செல்கிறார்.2 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்கின்ற அவர் பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் வரும் 18 ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் ஒன்றிய அரசு பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஜெகன் மோகன் ஆதரவு அளிப்பது குறித்தும்,சந்திரபாபு கைது குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி சென்று வந்தவுடன் அமைச்சரவை கூட்டம் நடத்தி அதன் பிறகு சட்டப்பேரவை கூட்டி முன்கூட்டியே தேர்தலை சந்திக்க 21ஆம் தேதி சட்டப்பேரவையில் முக்கிய முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.