வரும் டிசம்பர் 26- ஆம் தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் 26- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
சென்னை பல்கலைக்கழகத் தேர்வு தேதி அறிவிப்பு!
கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், இரண்டாவது முறையாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.