spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா? திருமாவளவன்

திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா? திருமாவளவன்

-

- Advertisement -

பிரதமர் மோடியை வரவேற்பதில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று திருமாவளவன் கூறினார்.

அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முறைப்படி, நீதிப்படி சபாநாயகர் செயல்படுவார் என பேட்டி.

திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா?- திருமாவளவன்

we-r-hiring

சென்னை ராமாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் ஒன்று கூடி உணவைப் பகிர்ந்து கொண்டனர் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இந்நிகழ்ச்சியில் அனைவரும் ஒரே நேரத்தில் நோம்பு துறந்தனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் “தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது, இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதவை நிராகரிக்க முடியாது, காலம் தாழ்த்த முடியாது என்பதால் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றார்.

திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா?- திருமாவளவன்

மேலும் இது தமிழ்நாட்டு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும் ஆளுநர் அவரின் பதவியும், பொறுப்பையும் மறந்து விட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டரை போல பேசியும் செயல்பட்டும் வருகிறார், அவர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுகிறார்.

சனாதான கொள்கைகளை உயர்த்தி பிடிக்கிறார்,அப்படிப்பட்ட ஆளுநரின் அனுகுமுறைகளை கண்டித்து வருகின்ற 12 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் ஆளுநர் மாளிகை முன்பு நடைப்பெறுகிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் எனவும் இந்திய அரசு ஆளுநர் ரவியை தமிழ்நாட்டிலிருந்து திரும்ப பெற வலியுறுத்துகிறோம் என்றார்.

திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா?- திருமாவளவன்

தொடர்ந்து பேசிய திருமாவளவன், ஆளுங்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்ற சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் திமுக செயல்பட்டது. அதே நேரத்தில் ஆளுநர் மற்றும் மோடியின் ஜனநாயக விரோத போக்கினை மிக வெளிப்படையாகவும் வரம்பு மீறாமலும் கண்டிக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகம், தமிழக முதல்வர் தனது பிறந்தநாளில் பாஜகவை வீழ்த்துவதே பா.ஜ.க.வின் இலட்சியத்துடன் ஒத்துப்போவதாக தி.மு.க., கூறியிருப்பதால், பிரதமர் மோடியை வரவேற்று, தன் நிலைப்பாட்டில் இருந்து நழுவிவிட்டதாக, சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா?- திருமாவளவன்

மேலும் பல்வீர் சிங் விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார். இறுதியாக அதிமுக எதிர்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முறைப்படி,நீதிப்படி சபாநாயகர் செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

MUST READ