spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தாமரையுடன் இணைந்த இலை- அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..!

தாமரையுடன் இணைந்த இலை- அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..!

-

- Advertisement -

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து உள்ளார்.

டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருடன் சந்தித்துப் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எம்.பி.க்களும் உடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

இன்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை அங்கிருக்கும் அதிமுக எம்.பி.,கள் தம்பிதுரை, சி.விசண்முகம் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். முன்னதாக இன்று காலை ஜி.கே.வாசன், அமித்ஷாவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சென்று சந்தித்து இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார்.ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! -  இபிஎஸ் 

அவர் அமித்ஷாவை சந்தித்திருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களும் டெல்லி சென்றனர். இந்நிலையில் அமித் ஷாவின் இல்லத்திற்கு 8 மணிக்கு மேல் அதிமுக நிர்வாகிகளுடன் சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்து பேசி வருகிறார். அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால் கூட்டணி உறுதியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மந்திரி அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

முன்னதாக ”டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன். பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை” என டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.

MUST READ