Homeசெய்திகள்அரசியல்அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: தவெக அரசைக் கண்டித்து டிடிவி தினகரன் அறிக்கை!

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: தவெக அரசைக் கண்டித்து டிடிவி தினகரன் அறிக்கை!

-

- Advertisement -

அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • கடும் விலை உயர்வு: தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சர்க்கரை விலை 50% வரையிலும், அரிசி விலை 40% வரையிலும், எண்ணெய் விலை 60% வரையிலும் உயர்ந்துள்ளது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

  • நிர்வாகத் திறமையின்மை: மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பொருட்களின் விலையேற்றத்தைக் கூடக் கட்டுப்படுத்த முடியாதது அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே காட்டுகிறது.

  • தேர்தல் வாக்குறுதிகள் & கூடுதல் சுமை: ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற சுமைக்கு மத்தியில் இந்த விலையேற்றமும் சேர்ந்து மக்களைப் பாதித்துள்ளது.

  • அமமுக-வின் கோரிக்கைகள்:


    வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் அளவை உயர்த்திக் வழங்க வேண்டும்.

“பொறுப்பு அமைச்சர்கள் இருக்காங்க!”… “ஒரு நாளில் எதுவும் மாறாது!” — பேரவையில் செங்கோட்டையன் vs எடப்பாடி பழனிசாமி அனல் பறந்த விவாதம்!

 

MUST READ