Homeசெய்திகள்அரசியல்மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்...

மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்

-

- Advertisement -
kadalkanni

மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவைப்பட்டால் மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும். என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் பேட்டி.

மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நலம் விசாரித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், இந்த சம்பவம் என்பது ஒரு துரதிஷ்டமான சம்பவம்,அரசு மருத்துவமனையில் பணி செய்யக்கூடிய மருத்துவர்கள் செவிலியர்கள் பாதுகாக்கப்பட்ட வேண்டும். மிக சிறந்த முறையில் ஒரு அர்ப்பனைபோடு சேவையாற்ற கூடிய முறையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இப்படி மருத்துவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்படும்,

காவல்துறை உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்கள், போதுமான அளவிற்கு சிகிச்சை செய்ய மருத்துவர்கள் இருந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும், மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோரின் காலியாக இருக்கும் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அணுகுமுறை முற்றிலுமாக சரியில்லை என்றால் இவ்வளவு எண்ணிக்கை உள்ள நோய்களிகள் எப்படி வர முடியும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஒரு தியாக மனப்பான்மையோடு தான் பணியாற்றி வருகிறார்கள்,

அழிவின் விளிம்பில் ந.த.க: சீமானுக்கு எதிராக தம்பிகள் தொடங்கிய புதிய அமைப்பு

ஒரு இரு இடங்களில் நடந்த சம்பவத்தை வைத்து அணுகுமுறையை குறித்து நாம் குறை கூற முடியாது, கத்தியை எடுத்தவர்கள் எப்பொழுதும் கத்தி எடுத்த காரணத்தை குறித்து நியாயப்படுத்தி தான் பேசுவார்கள், இது போன்ற சம்பவங்களை தவிர்க்க போதுமான அளவு மருத்துவர்கள் நிரப்பப்பட வேண்டும் கடந்த காலத்தை விட தற்போது அதிகப்படியான நோயாளிகள் வருகை இருப்பதால் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட காலி இடங்களை நிரப்ப வேண்டும், இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவைப்பட்டால் இதற்காக போராட்டமும் நடத்தப்படும், என கூறினாா்.

MUST READ